Thursday 14 July 2011

யார் இந்த ஈழத் தமிழன்


 இன்று செய்தித்தாள்களிலும் ;அரசியல் மேடைகளிலும் உரிமைக்கேட்டுப் போராடும் ஈழத் தமிழர்களின் போராட்டம் அரசியலாக்கப் படுகிறது.உண்மையில் இந்த ஈழத் தமிழன் யார் ஈழ மண்ணின் மைந்தர்களா அல்லது இங்கிருந்து அங்குச் சென்றுக் குடியேறியவர்களா என்று நம் தமிழக தமிழர்களிடம் கேட்டால் இருவிதமான பதில்கள் வருகின்றன.
         அவர்கள்தான் ஈழ மண்ணின் மைந்தர்கள் என ஒரு சாராரும் தமிழகத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன் அங்குச் சென்றுக் குடியேறியவர்கள் என ஒரு சாராரும் பதில் கூறுகின்றனர்.;உண்மையில் யார் இந்த ஈழத் தமிழன்?மண்ணின் மைந்தனா?
       அரசியல் நோக்கர்களின் கோணத்தில் திருமதி.இந்திரா காந்தி அவர்கள் இந்தியப் பாராளுமன்றத்திலேயே கூறியுள்ளார் தமிழர்கள்தான் இலங்கையின் பூர்வக் குடிகள் என்று (Tamilians are the primary inhabitants of Sri Lanka)
      அறிவியல் அறிஞர்கள் கூறுவது என்னவென்றால் கி.மு.8000 ஆண்டில் ஒரு பெரிய பனிக்கட்டி உருகி கடல் மட்டம் 300 அடி உயர்ந்தது எனக் கூறுகிறார்கள்.இதனை பிளம்மிங் என்ற அறிஞர் தன்னுடைய தற்போதைய அறிவியல்(Current Science)என்ற நூலில் தெளிவாகக் கூறுகிறார்.
       சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் இலங்கை முழுவதும் தமிழர்கள்தான் இருந்துள்ளனர் என வரலாறு குறிப்பிடுகிறது.ரத்தினத் தீவு என மணிமேகலையிலும்;கடல்சூழ் இலங்கை கயவாகு வேந்தன் என சிலப்பதிகாரத்திலும்;ஈழத்து உணவும் காழகத்து ஆக்கம் எனப் பட்டினப்பாக்கத்திலும் குறிப்பிடப் படுகிறது.முதலாம் ராஜ ராஜன் காலத்தில் மும்முடிச் சோழ மண்டலம் என்றப் பெயரில் சோழப் பேரரசின் ஒரு பகுதியாகவே இலங்கை இருந்துள்ளது.
ஈழத்துப் பூழந்தேவனார் என்ற கவிஞர் சங்க இலக்கியத்தில் ஏழு பாடல்களை எழுதியுள்ளார்.கி.பி.ஆறாம் நூற்றாண்டில் பாலி மொழியில் எழுதப் பட்ட மகாவம்சம் என்ற நூலில் விஜயன் வரும்பொழுது அங்கு இயக்கர்;நாகர்;வேடர் என்ற மூன்று பழங்குடியின மக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.நன்நாகனார்;பெருநாகனார்;போன்றோர் சங்க இலக்கியத்தில் பல பாடல்களை எழுதியுள்ளனர்.இதனை இலங்கை அரசே விஜயனின் வருகை(Arrival Of Vijaya)என்றப் பெயரில் தபால் தலை வெளியிட்டு ஒப்புக் கொண்டுள்ளது.
       ஈழம் என்பதற்குப் பொன் மற்றும் செல்வம் இன இரண்டுப் பொருள்கள் இருக்கின்றன.ரத்தின கற்களின் தீவு (Gems of Island)என்றே ஆங்கிலேயர்கள் இலங்கையை அழைத்துள்ளனர்.ஈழம் என்பது மருவி ஈழ;சீழ;சிஹள;சிங்கள என வந்ததாக ஹோப்சன்&ஜோப்சன் அகராதி குறிப்பிடுகிறது.அதே அகராதி ஈழ என்பதில் இருந்தான் சீழ;சைல;சிலோன் என்றப் பெயர்கள் மருவி வந்துள்ளன எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.   
      1600 ம் ஆண்டுகளில் தமிழ் மொழிதான் அங்கு முதல் மற்றும் அரச மொழியாக இருந்திருக்கிறது என வரல்லாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன1650 ம் ஆண்டுவாக்கில் ராபர்ட் கனெக்ஸ் என்றப் பயணி கண்டி அரசனால் கைது செய்யப் படுகிறார்.அவன் சிறையிலிருந்து தப்பி 1656 இல் அனுராதபுரத்தில் சிங்களத்தில் பேசுகின்றார் அங்கு எவருக்குமே சிங்களம் புரியவில்லை.அக்காலகட்டத்தில் அனுராதபுரம் முழுவதும் தமிழ் பேசும் மக்கள்தான் இருந்துள்ளனர் என அவர் எழுதிய "The Historical Relations Of Island Ceylon"என்ற நூலில் குறிப்பிடுகிறார். 
.வாஸ்கோடகாமாவின் வருகைக்குப் பின் இந்திய போர்ச்சுக்கீசிய;ஆங்கிலேய மற்றும் டச்சு அரசுகளுக்கு அடிமையாக இருந்ததுப் போல் இலங்கையும் சுமார் இருநூறு ஆண்டுகள் அயல்நாடுகளுக்கு அடிமையாக இருந்துள்ளது.
     ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் இருந்து தமிழ் நாட்டிற்கு வருவதற்கு கடவுச்சீட்டு(Passport ) தேவை இல்லை.அக்காலகட்டத்தில் யாழ்பாணத்தில் இருந்து படகுகளில் ராமேஸ்வரத்திற்கு படம் பார்க்க வருவார்கள் என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.ஆழம் குறைவான இடங்களில் இறங்கி படகினை தள்ளியும் நடந்தும் ராமேஸ்வரத்தை வந்தடைவார்கள் என வரலாற்று ஆவணங்களில் தெரிவிக்கப் படுகின்றன.இன்றளவும் கடலுக்கடியில் திட்டு திட்டுகளாகக் காணப் படுகின்றது என அறிவியல் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
     1836-40 காலகட்டங்களில் ஆங்கிலேயர்கள் கண்டி மலை பகுதிகளில் தேயிலை சாகுபடி செய்ய முனைகின்றனர்.அக்காலகட்டத்தில் ஈழத்து தமிழர்கள் அனைவரும் செல்வ செழிப்போடு வாழ்ந்து வந்த காரணத்தினாலும்,சிங்களர்கள் யாரும் வேலைக்கு வராத காரணத்தினாலும் இந்தியாவிலிருந்து லட்சக் கணக்கான தமிழர்களை கண்டி மழைப் பகுதியில் உள்ள புதுரேலியா;மதுளை;மாத்துளைப் போன்ற பகுதிகளில் ஆங்கிலேயர்கள் குடியேற்றியதாக பிரிட்டிஷ் காலத்து ஆவணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.
     

No comments:

Post a Comment